ஒரு கருத்தை பற்றிய பல விதமான கேள்விகளுக்கு பதில் அளிப்பது, போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வழிவகுத்தாலும், பாடத்தை எந்த அளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பது கேள்விக்குறியே! பதில் அளிக்கும் திறமைக்கு மேல் கேள்வி கேற்கும் திறன் இருக்க, பாடத்தில் முதன்மை அடைய வாய்ப்புகள் அதிகம்.
கேள்வி கேட்கும் திறன், அம்மா தனது மழலையிடம் பள்ளியில் என்ன படித்தாய் என்பதை விட, என்ன கேட்டாய் என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.
தயவு செய்து வழக்கமான வீட்டு பாட முறைகளை மாற்றி (100 times imposition, copy the text book answer three times) புத்தகத்தில் உள்ள கேள்விகளை தவிர, வேறு கேள்விகள் கேட்டு அதற்கு சாத்தியமான பதில் தருதல், புரிந்து கொண்ட பாடத்தை வரைபடம் மூலம் விளக்கம் செய்தல், கேள்விக்கான பதிலை கொடுத்து, அதை மாணவனை மதிப்பிட செய்ய சொல்லி அதன் மூலம் மாணவனை மதிப்பிடுதல் போன்றவைகளை செய்து மாணவனின் ஆக்கதிறனை வளர்க்கலாம்.
இதனால், நல்லா நாளு கேள்வியையும் கேட்கலாம்!
No comments:
Post a Comment